திருச்சிராப்பள்ளி, பிப்.6 - திருச்சி புறநகர் மாவட்டம் சமயபுரம் எஸ்.கண்ணனூர் பேரூராட்சி 5 ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பி.சாந்தி ஞாயிறன்று 5 ஆவது வார்டுக்கு உட்பட்ட எஸ்.கள்ளுக்குடி, காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது திமுக கிளைச் செயலாளர் ஷேக்தாவுத், பிரதிநிதி பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கே.வி.எஸ்.இந்துராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன், ஒன்றிய செயலாளர் கனகராஜ், விடுதலை சிறுத்தை கட்சி ஏகலைவன், காங்கிரஸ் கட்சி ராஜேந்திரன், மதிமுக ஒன்றிய செயலாளர் தியாகு உள்பட பலர் உடனிருந்தனர்.