மயிலாடுதுறை, பிப்.9 - மயிலாடுதுறை மாவட் டம் பொறையாரில் நபார்டு வங்கி உதவியுடன் மாயூரம் ஊரக அங்காடி திறக்கப்பட் டது. பொறையாரில் நபார்டு வங்கி நிதியுதவியுடன், மாயூ ரம் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் மக்கள் சமூக வளர்ச்சி சங்கம் செய லாக்கத்தின் மூலம் மாயூரம் ஊரக அங்காடி திறக்கப்பட்டது. விவசாயிகளின் வேளாண் உற்பத்திப் பொருட்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்கள் இந்த ஊரக அங்காடியில் விற்பனை செய்யப்படும். இந்த அங்காடியை நபார்டு வங்கி துணை பொது மேலா ளர் டாக்டர் எஸ்.சுதர்சன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். முன்னோடி வங்கி (ஐஓபி) மேலாளர் பிரபா கரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், மக்கள் சமூக வளர்ச்சி சங்கத் தலைவர் சங்கீதா, உறுப்பி னர் ராமலிங்கம் மற்றும் விவ சாயிகள் கலந்து கொண்டனர்.