பாபநாசம், ஜுன் 14-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி சங்க குடும்ப விழா ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.
இதில், உதவி ஆளுநர் ராஜா காளிதாஸ், குடும்ப விழா பொறுப்பாளர்கள் கஸ்தூரி, மைதிலி, சுதா முன்னிலை வகித்தனர். பாபநாசம் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
மாவட்ட முன்னாள் ஆளுநர் ரமேஷ் பாபு, வருங்கால மாவட்ட ஆளுநர் லியோன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங் கிப் பேசினர். இதில் பாபநாசம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் சரவணன், விவேகானந்தன், செந்தில் கண்ணன், பிரான்சிஸ் சேவியர், பக்ருதீன் அலி அகமது, காதர் பாட்ஷா, செல்வகுமார், செந்தில்நாதன், முருகா னந்தம், சக்திவேல், முருகவேல், அன்பழகன், சுப்பிரமணி யன், சாமிநாதன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.