districts

img

தீ விபத்தில் கூரை வீடு சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவாரணம் வழங்கல்

மயிலாடுதுறை, ஜூன் 25-  

     மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் ராஜம்மாள் தெருவை சேர்ந்தவர் சிவகாமி. இவர் வெள்ளியன்று இரவு 8:30  மணியளவில் சமைத்துக் கொண் டிருக்கும் போது தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் இவரது கூரை வீடு முழுவதும் எரிந்து நாச மானது. இதுகுறித்து தகவலறிந்த  பூம்புகார் சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா எம்.முருகன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5000 மற்றும் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கி ஆறுதல்  கூறினார். மேலும், வருவாய்த் துறை சார்பில் தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன், ரூ.5000 மற்றும் மண்ணெண்ணெய், வேட்டி,  புடவை, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.