districts

img

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் நாகை எம்.பி.யிடம் மனு

திருவாரூர், நவ.19 - சிஐடியு சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தினர், நாகை நாடாளுமன்ற உறுப்பினர்  வை.செல்வராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், கடந்த 2014 முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் பரிந்துரை என்ற  பெயரில், 1988 மோட்டார் சட்டத்தை சாலை  பாதுகாப்பு எனக் கூறி,ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது. இதனை எதிர்த்து போராட்டங்கள் நடத்தியும் ஒன்றிய அரசு  எதையும் ஏற்கவில்லை. இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தி வருகிறது.  புதிய மோட்டார் வாகனச் சட்டத்தால் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித் தும், தற்போது தொழிலாளர்களுக்கு எதிராக ஒவ்வொரு சட்டமாக நிறை வேற்றப்படுகிறது. மோட்டார் வாகனச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து புதிய மோட்டார் வாகன சட்டம்-2019-ஐ திரும்ப பெற வலியுறுத்த வேண்டும். மனுவை  பிரதமரிடமும் அளிக்க வேண்டும்” என தெரி விக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மனு அளிக்கும் போது சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.முருகையன், மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத்  தலைவர் கே.ஜெ.ஆர்.காதர் மாவட்டச் செய லாளர் எம்.கே. ஜெய்சங்கர், பொருளாளர் எஸ்.வெங்கடேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.