மயிலாடுதுறை, ஆக.20 -
புதுமனை புகுவிழாவிற்கு சென்ற 5 பேர் ஞாயிறன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தனர். பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சிக்குட் பட்ட சிங்கனோடை மெயின்ரோட்டில் வசிப்பவர் துரைராஜ். இவரது புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, உறவினர்கள் சீர்வரிசை எடுத்துக் கொண்டு வந்தனர்.
அப்போது திருக்கடையூர் சிங்கனோடை வழியாக காரைக் கால் நோக்கி சென்ற கார் அவர்கள் மீது மோதியதில் சீர்காழி எருக்கூரை சேர்ந்த ஜெயா(55), வலங்கைமானை சேர்ந்த அபி நயா (37), நாகப்பட்டினம் சித்ரா (55), திருக்கடையூர் தன லட்சுமி (65), சிங்கனோடை சண்முகப்பிரியா (29), எடுத்துக் கட்டி சாத்தனூர் அபிராமசுந்தரம் (70) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் அபிராமசுந்தரம், நாகப்பட்டி னம் அரசு மருத்துவமனைக்கு சித்ரா, தனலட்சுமி ஆகியோர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இருவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலத்த காய மடைந்த ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழி யிலே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொறையார் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு, உதவி ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் வழக்குப் பதிந்து தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.