அரியலூர், டிச.12- மறுக்கப்படும் உரிமைகளுக்கு சட்டத்தின் ூலம் தீர்வுக் காணலாம் என்று அரியலூர் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமார் கூறினார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் செவ்வாய்க் கிழமை யன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீதிபதி செந்தில்குமார் பேசு கையில், இனம், நிறம், மொழி, பாலினம், சாதி, மதம் என எதிலும் பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்து வதே மனித உரிமைகள் தினத்தை கொண்டாடுவதற்கான நோக்கமாகும். கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவை களைப் பெற்று சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு. எனவே நமது உரிமைகள் பாதிக்கப் படும் பொழுது சட்டத்தின் மூலம் அதற்கு தீர்வு காண வேண்டும். அதற்கு அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தேவையான அனைத்து சட்ட உதவி மற்றும் ஆலோசனைகளை இலவசமாக வழங்கி வருகிறது என்று தெரிவித்தார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு விழிப் புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி னார். இந்நிகழ்வில், அரியலூர் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தின் உறுப்பினர் த.குணசேகரன், மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகின் சட்ட ஆலோசகர் த. கார்த்திகேயன் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணியாளர்கள், சட்டப்பணிகள் தன்னார்வலர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், 400-}க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.