districts

வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

அரியலூர், ஆக.27 -

       அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.அருண்ராய் சனிக்கிழமை ஆய்வு செய் தார்.

      அரியலூர் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் வழங்கல் துறையின்  சார்பில் அம்ரூத் 2.0 திட்டத் தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோக மேம்பாட்டுத் திட்டப் பணி கள், மேலக்கருப்பூ கிரா மத்தில் அண்ணா மறு மலர்ச்சித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும்  குமாரசாமி ஏரி தூர்வாரு தல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் பணி, ஜெயங் கொண்டம் ஒன்றியத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் மேற்கொள் ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி களை ஆய்வு செய்தார்.

   தொடர்ந்து ஜெயங் கொண்டம் பிற்படுத்தப்பட் டோர் நல மாணவர் விடுதி யினை ஆய்வு செய்து,  மாண வர்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் உணவை வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.