அம்மாபேட்டை, ஏப்.21 - அம்மாப்பேட்டை வட்டா ரத்தில் உரக்கடைகளில் வருவாய்த் துறை, வேளாண்மை துறை கூட்டுக் குழுவினர் ஆய்வு மேற் கொண்டனர். தற்போது பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை நெல், பருத்தி, கடலை, கரும்பு ஆகிய பயிர்களில் பயன்படுத்துவ தற்கான யூரியா, டிஏபி, காம்பிளக்ஸ் ஆகிய உரங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. ஆனால், உரங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட புகார்களை அடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி, வருவாய்த் துறை, வேளா ண்மைத் துறை அலுவ லர்கள் இணைந்து உரக்கடை களில் கூட்டாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் உரங்க ளின் உண்மையான இருப்பு நிலவரம், விவசாயிகள் வாங்கிச் செல்லும் உரங்க ளின் அளவு, உரங்களின் பயன்பாடு ஆகியவை கண்காணிக்கப்படுகின்றன. தேவைக்கு அதிகமாக உரங் களை விவசாயிகள் வாங்கி இருப்பு வைக்க கூடாது. உர விநியோகஸ்தர்களும் செயற்கையான தட்டுப் பாட்டை ஏற்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இருப்பில் உள்ள பழைய உரங்கள், பழைய விற்பனை விலைக்கே விற்பனை செய்யப்பட வேண்டும். மூட்டைகளின் மேல் விலையை மாற்றம் செய்யக்கூடாது. உரக் கட்டுப் பாட்டு சட்டம் 1985 இன் படி உர விற்பனையாளர்கள் செயல்பட வேண்டும். இதில் ஏதேனும் விதிமீறல்கள், குறைபாடுகள் கண்டறியப் பட்டால் சம்பந்தப்பட்ட உர விற்பனை நிலையத்தின் உரிமம் தற்காலிக ரத்து, விற்பனை முடக்கம் ஆகிய வற்றில் ஏதேனும் ஒரு நட வடிக்கை மேற்கொள்ளப் படும் என அறிவுறுத்தப்பட்டது.