தஞ்சாவூர், ஏப்.29- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டா ரத்தில் பணி ஓய்வு பெறும் தலைமையாசிரி யர்கள், ஆசிரியருக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா திங்கள்கிழமை நடை பெற்றது. தலைமையாசிரியர்கள் க.கணேசன், (களத்தூர் மேற்கு ஊராட்சி தொடக்கப் பள்ளி), ஆர்.வாசுகி, (நாடாகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி), கி.லதாஸ்வரி, (பொன்-காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி), த.சாந்தி (துறவிக்காடு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி), பி.மாலதி (அஞ்சூரணிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி), இடைநிலை ஆசிரியை சி.லைலா (எடுத்தணி வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி) ஆகியோருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரி யர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ந. ரெங்கராஜன், மாநிலத் தலைவர் மு.லெட்சுமி நாராயணன், மாநிலப் பொருளாளர் இரா. குமார், மாவட்டச் செயலர் செ.இராகவன் துரை உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஏற்புரை யாற்றினர். இதில் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், ஆசிரியர்கள், உறவினர்கள் கொண்டனர்.