districts

img

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்த தீர்மானம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 3- நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜன நாயகக் கூட்டணியை வீழ்த்துவோம் என சிஐ டியு தீர்மானித்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க (சிஐடியு) மாநில செயற்குழு கூட்டம்  ஞாயிறன்று திருச்சி வெண்மணி இல்லத்தில்  நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாநிலத் தலை வர் வி.குமார் தலைமை வகித்தார். வேலை அறிக்கையை மாநில பொதுச்  செயலாளர் ஆர்.புவனேஸ்வரன் வாசித்தார்.  கூட்டத்தில்  நவீன தாராளமயத்தை மூர்க்கத்தனமாக அமலாக்கி, பொது விநி யோக முறையை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையை முறியடிக்க வேண்டும்.  அதற்கு வரும் நாடாளுமன்றத் தேர்த லில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்த  வேண்டும். 2013 முதல் 2016 வரை பணியில் சேர்ந்த பருவ கால பணியாளர்களை தேர்தல்  தேதி அறிவிப்பதற்கு முன்பே பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங் களில் கொள்முதல் செய்து ஒரு மாதம் ஆகி யும் இயக்கம் செய்யாமல் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனே இயக்கம் செய்ய  வேண்டும்.  கால தாமதத்தால் ஏற்படும் எடை குறை விற்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக  தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியை  வெற்றி பெற செய்ய தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் முழு மையாக பாடுபடும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.