தஞ்சாவூர், ஜூன் 24 - தஞ்சாவூர் அருகே ரெடிமிக்ஸ் தொழிற்சாலை யால் குடியிருப்புகளில் படி யும் சிமெண்ட் படிமங்க ளால் அப்பகுதியில் வசிக் கும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு ஊராட்சி யில் பொட்டுவாச்சாவடி பகுதியில் ஏராளமான வீடு கள் உள்ளன. தஞ்சாவூர் புறவழிச்சாலை அருகே உள்ள இந்த பகுதியில் பல நகர்களில் வீடு களை புதிதாக கட்டியும் பொதுமக்கள் பலர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதியில் ஒரு ரெடிமிக்ஸ் (சிமெண்ட் கலவை) தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையிலிருந்து தினமும் ரெடிமிக்ஸ் கலவையை அரைத்து, லாரிகள் மூலம் தஞ்சாவூரின் பல்வேறு பகுதி களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தினமும் இந்த ரெடிமிக்ஸ் தொழிற் சாலை தொடர்ந்து பல மணி நேரம் இயங்கு வதால், அதிலிருந்து சிமெண்ட் படிமங்கள் காற்றில் பரவி அருகில் குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் உணவுப் பொருட்கள், துணி கள், குடிநீரில் படிந்து விடுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, அப்பகுதி யில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறும் உண்டாகிறது என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறை யிட்டுள்ளனர். ரெடிமிக்ஸ் தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாத காரணத்தால், காற்றில் இந்த சிமெண்ட் கலவை படிமங்கள் பரவி, பொதுமக்கள் மீது படர்வதால், சில நேரங்களில் கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே ரெடிமிக்ஸ் தொழிற்சாலையை உரிய பாதுகாப்பு அம்சங்களோடு நடத்த வும், இல்லையென்றால் அங்கிருந்து அகற்ற வும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.