கும்பகோணம், ஜூலை 24-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தின் 15-வது பேரவை கும்பகோணத்தில் நடைபெற்றது.
வட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். மாநிலச் செயலாளர் எஸ். கோதண்டபாணி. எஸ். ஹேமலதா ஆகியோர் நிறைவுரை யாற்றினர்.
ஏற்கனவே இருந்த பொறுப்பாளர்களின் பணியிட மாறுதல் காரணமாக, புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் வட்டச் செயலாளராக பிரபா கரன், துணைத் தலைவர்களாக கோபிநாத் மற்றும் மகேஸ்வரி, இணைச் செயலாளராக புவனேஸ்வரி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பணி மாறுதலில் சென்ற கும்பகோணம் அரசு ஊழியர் சங்க செயலாளரின் ஊதியம் மற்றும் எல்பிசியை நிறுத்தி வைத்திருக்கும், தஞ்சை மாவட்ட புள்ளியியல் இயக்கு நரின் அதிகார மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணம் மாநகராட்சி புதிய அலுவல கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை அமைக்க வேண்டும். அரசாணை 155-ஐ முழுவதுமாக ரத்து செய்து அனைத்து நிலை பணிகளையும் காலமுறை ஊதி யத்தில் வழங்கிட வேண்டும். கும்பகோணத்தில் அரசு தொழிற்பயிற்சி, அரசு பாலிடெக்னிக் மற்றும் தொழில் நுட்ப பொறியியல் கல்லூரிகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.