கரூர், ஏப்.25 - கரூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயி லால் பொதுமக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கரூர் மாவட்ட நிர்வா கம் முக்கிய நகரப் பகுதிகளிலும், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் நீர், மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் 106 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவுகிறது. இதனால் கரூர் மாவட்ட ஆட்சியர் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். அதேபோல வானிலை ஆய்வு மையமும் கரூர் மாவட்டத்திற்கு வெயி லின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை அறிவித்துள்ளது. வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க, அதி களவில் தண்ணீர் பருக வேண்டும், குளிர்ச்சி யான இடத்தில் இருக்க வேண்டும், வெயி லின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய நேரத்தில் கடுமையான வேலைகளை செய் வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. கடுமையான வெயிலை தாங்க முடியா மல் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு, பழங்கள் விற்பனை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வாங்கிச் செல்கின்றனர். நீர், மோர் பந்தல் அமைக்க கோரிக்கை கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் மாநகரம், குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராய புரம், கடவூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட முக்கிய நகரப் பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், கரூர் மாவட்ட நிர்வா கம் நீர், மோர் பந்தல் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.