districts

திருச்சி முக்கிய செய்திகள்

மயிலாடுதுறை ஆட்சியர் மாற்றம்! 

சென்னை, பிப்.28- மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் அங்கன்வாடிக்கு  சென்ற மூன்றரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக 16 வயது சிறுவன் கைது செய்யப் பட்டான். இந்நிலையில், மயிலாடுதுறை ஆட்சியர் மகா பாரதி இந்த சம்பவத்தில் அந்த சிறுமி மீதும் தவறு உள்ளது. எனவே இருபக்கமும் விசாரிக்க வேண்டியுள்ளது என்று பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தி பேசிய தற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இடதுசாரி கட்சிகளும்  பிற அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து இருந்தன.  இந்நிலையில், மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நியமனம் செய்யபப்பட்டுள்ளார். மகாபாரதிக்கு வேறு எந்த பணியும் தமிழக அரசு ஒதுக்கவில்லை. இதற்கான  உத்தரவை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகா னந்தம் பிறப்பித்துள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை

சென்னை, பிப்.28- திருவாரூர் மாவட்ட வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை  எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வேட்பு மனு வில் விவரம் மறைத்தவர்களை தகுதி நீக்கம் செய்யாவிட்டால்,  எதற்காக தகவல் கேட்கப்படுகிறது? என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாள ருக்கு உத்தரவிட்டதுடன் வழக்கை முடித்து வைத்தனர்.

காட்டு பன்றிகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, பிப்,28-  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை யில், வெள்ளியன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன், மாவட்டத் தலைவர் சிதம்பரம், மாவட்ட துணைத் தலைவர் முருகேசன், மாவட்ட  இணைச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர், ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:  திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி ஒன்றியம் துறை யூர் வட்டத்தைச் சார்ந்த கோட்டாத்தூர் கிராமம் மற்றும்  அதனை சுற்றியுள்ள கீழ குன்னுப்பட்டி, மேல குன்னுப்பட்டி,  கீழ நடுவலூர், மேல நடுவலூர், டி-மேட்டூர், சீரங்கனூர், அம்மினிமங்கலம், சாத்தனூர், புத்தனாம்பட்டி, ஓமந்தூர்  உள்ளிட்ட கிராமங்களில் காட்டு பன்றிகள், விவசாயிகளின் விளை நிலங்களில் பயிரிடும் மரவள்ளி கிழங்கு, நெல், பருத்தி, கரும்பு, மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய், கடலை, கம்பு போன்றவற்றை சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் மிகவும் துயரத்துக்கு ஆளாகின்ற னர்.  காட்டுப் பன்றிகளிடம் இருந்து விவசாயிகளை பாதுகாக்க  வேண்டியுள்ளது. எனவே, வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கவும், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பயிர் சேதத்திற்கு நிவாரணம் வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

திணையாகுடி - திருநெல்லிவயலில்  மாட்டுவண்டி  எல்கை பந்தயம்

அறந்தாங்கி, பிப்.28-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா திணையாகுடி, திருநெல்லிவயல் , கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக, மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர்,  புதுக்கோட்டை இராமநாத புரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள்   போட்டியில் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு மாடு  என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள்  போட்டி யில் கலந்து கொண்டன.  இரட்டை மாட்டு  வண்டிகள் நிர்ணயிக்கப் பட்ட பந்தய இலக்கினை நோக்கி ஒன்றையொன்று முந்திச் சென்றன. போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டின் உரிமை யாளர்களுக்கு ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்  ரொக்கப் பரிசும், கோப்பை களும் வழங்கப்பட்டன.  சாலையின் இரு புறமும்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இதனைக் கண்டு ரசித்தனர். நாகுடி காவல்துறையினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவெறும்பூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, பிப்.28-  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் கே.சி. பாண்டியன் பேசுகை யில்:  திருவெறும்பூர் கிளி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும்.  நவல்பட்டு சாலையில் உள்ள சொறி குமிழியை புதிதாகக் கட்ட வேண்டும். திருவெறும்பூர் ஒன்றி யத்தில் உள்ள அனைத்து குளங்களை யும் தூர்வார வேண்டும். திருவெ றும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முழு நேர செயலா ளர் நியமிக்க வேண்டும். திரு வெறும்பூரில் நெல் கொள்முதல் நிலை யம் அமைக்க வேண்டும். கூத்தப்பர் பேரூராட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் 80-க்கும்  மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.  காட்டூர், நியூ டவுன்  தாலுகா அலுவலகம், கணேசா தென்புறம் உள்ள பேருந்து நிறுத்தங்க ளில் பேருந்துகள் நின்று செல்ல உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினார்.

இந்தி திணிப்பை  நிறுத்த வேண்டும் மாணவர் சங்கம் கோரிக்கை

திருவாரூர், பிப்.28-  திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ள குடவாசல் அரசு கலை அறிவியல் கல்லூரி கிளை மாநாடு ஜி.டி.மஹாலில் அரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு கிளை தலைவர் ரா. சிவனேஷ் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் க. கலைச்செல்வன் மாநாட்டு கொடியை ஏற்றினார். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரா. ரஞ்சித் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட‌ச் செயலாளர் பா.லெ. சுகதேவ் உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரெ.கார்த்திகாதேவி புதிய நிர்வாகிகளை அறிவித்து நிறைவுரையாற்றினார். மாநாட்டில் கிளைத் தலைவராக சத்தியசீலன், செயலாளராக ரா.சிவனேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை கல்வி முதல், உளவியல் பாடங்களை பாடத்திட்டத்தில் இணைத்திட வேண்டும். யுசிஜியின் (UGC) வழிகாட்டு நெறிமுறை வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும், மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பையும் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக, கல்லூரி அருகே இருந்து பேரணியாக கோரிக்கைகளை முழக்கமிட்டபடி ஓகை ஆற்று பாலத்தைக் கடந்து, குடவாசல் கடைவீதி வழியாக மாநாட்டு அரங்கத்தில் பேரணி நிறைவு பெற்றது.

அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின்  மாவட்ட செயற்குழு கூட்டம்

பெரம்பலூர், பிப்.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் அலுவலகத்தில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது. மாவட்ட தலைவர் மேனகா தலைமை வகித்தார். சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, மாவட்டச் செயலாளர் மணிமேகலை பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின், தொழிலாளி வர்க்கம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் சுமதி நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் புதிய செயலியில் பதிவேற்றம் செய்யச் சொல்லி ஊழியர்களின் பணி சுமையை அதிகரிப்பதற்கு கண்டன், மே மாதம் கோடை விடுமுறையை ஒரு மாத காலம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 4 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, சென்னையில் கோரிக்கை மாநாடு நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கும்பகோணம் அரசு கல்லூரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கும்பகோணம், பிப்.28- கும்பகோணம் அரசினர் கல்லூரியில் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் மையம் சார்பில் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்வது என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்காசி தனியார் ஐ.ஏ.எஸ் அகாடெமி நிர்வாக இயக்குநர் ஆகாச மூர்த்தி, பெரிதினும் பெரிது கேள் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.  முன்னதாக, கல்லூரி முதல்வர் மாதவி தலைமை உரையாற்றினார்.  வேதியியல் துறைத்தலைவர் மா. மீனாட்சி சுந்தரம், இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறைத்தலைவர் சீ. தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆங்கிலத் துறைத்தலைவர் சரவணன், கார்த்தி, தமிழ்த்துறை இணைப் பேராசிரியர்கள் க. அன்புமணி, பெ. கிருஷ்ணமூர்த்தி, க. இராஜசேகரன், கோபால கிருஷ்ணன், கணினி அறிவியல் துறைப் பேராசிரியர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.