சின்னாளப்பட்டி, நவ.25- வத்தலக்குண்டுவில் மஞ்சளாற்று புதர் களை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மஞ்ச ளாறு அணையிலிருந்து வத்தலக்குண்டு மஞ்சளாற்றுக்கு தண்ணீர் வருகிறது. புதுப் பட்டியில் இருந்து பெரியகுளம் சாலை, பிலிஸ் புரம், பெருமாள் கோவில், சங்கிலி கோவில், நடுத்தெரு, தெற்குத் தெரு ஆகிய வற்றையொட்டி ஊர் நடுவே செல்லும் மஞ்ச ளாற்றில் கருவேல முட்செடிகளும், புதர் களும் நிறைந்து காணப்படுகிறது. அங்குள்ள சீமை கருவேல முட்செடி கள் கோடை காலங்களில் இருக்கும் குறைந்த அளவு தண்ணீரையும் உறிஞ்சி விடுகிறது. மேலும் புதர்கள் மண்டி இருப்பதால் பாம்பு, தேள், நட்டுவாக்காலி போன்ற விஷ ஜந்துக்கள் ஆற்றையொட்டியுள்ள வீடு களில் புகுந்து விடுகிறது. எனவே பொதுப்பணித்துறையினர் ஆற்றிலுள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், ஆற்றோர குடியிருப்பு வாசிகளும் கோரி க்கை விடுத்துள்ளனர்.