குடவாசல், ஏப்.8 - விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நூறு நாள் வேலையை முறை யாக தொடர்ந்து வழங்க வேண்டும். வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நூறு நாள் வேலை வழங்கிட வேண்டும். வேலை செய்த சம்பள பாக்கியை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலங்கை மான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் கே.கலியபெருமாள் தலைமை வகித்தார். ஒன்றிய செயலா ளர் என்.பாலையா முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.இராதா, மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், தொழிலா ளர்கள் பங்கேற்றனர்.