விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்க கோரிக்கை
தஞ்சாவூர், ஜன.21 - தமிழ்நாடு அரசு, பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்க ளுக்கு வழங்கிய பொங்கல் தொகுப்பை யும், ரூ.1000 ரொக்கப் பணத்தையும் பொங்கலுக்கு முன்பாக பெறத் தவறியவர்களுக்கு வழங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு பொங்கலுக்கு பச்சரிசி, கரும்பு, சீனி மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் ஆகியவற்றை பொங்கல் பரிசுத் தொகுப்பாக அறிவித்து, ஒருவாரம் முன்னதாக டோக்கன் வழங்கப்பட்டு ஜனவரி 14 ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. இந்நிலையில் வெளியூர் சென்றிருந்தவர்கள், உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தவர்கள் என பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பரிசுத் தொகுப்பு பெறாமல் விடுபட்டுள்ளனர். பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் உள்ள 70 அங்காடிகளில் 1500க்கும் மேற்பட்டவர்கள் பொங்கல் தொகுப்பு பணம் வாங்க தவறியுள்ளனர். இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கானோர் பரிசுத் தொகுப்பு பெறாமல் விடுபட்டுள்ளனர். விடுபட்டவர்கள் பொங்கல் விடுமுறைக்கு பிறகு வாங்கிக் கொள்ளலாம் என அங்காடிகளில் சென்று கேட்டதற்கு, அங்காடி விற்பனையாளர்கள் பொங்கலுக்கு பிறகு மீதம் உள்ள பணத்தை அரசு திரும்பச் செலுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளதால் வழங்க முடியாது என கூறியுள்ளனர். இதனால் பொங்கல் பணம் வாங்காமல் விடுபட்ட ஏழை, எளிய குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள னர். பொங்கலுக்கு பிறகு தொடர் விடுமுறை காரணமாக அங்காடிகளுக்கு பொதுமக்கள் செல்லவில்லை. எனவே, விடுமுறை தினத்தை கணக்கிட்டு விடுபட்ட வர்களுக்கு பொங்கல் பணம் மட்டுமாவது வழங்க குறிப்பிட்ட தேதி நிர்ணயம் செய்து முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய விமானப்படை அக்னிவீர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், ஜன.21 - இந்திய விமானப்படை “அக்னிவீர் வாயு 01/2025” ஆட்சேர்க்கைக்கு தகுதியான நபர்கள் https://agnipath vayu.cdac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 17 ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக தேர்வு நடை பெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, கடந்த 2004ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை 02 ஆம் தேதி (இரண்டு தேதிகளும் உட்பட) வரையிலான காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://agnipath vayu.cdac.in/ என்ற இணையதள முகவரியில் பார்வை யிடலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜன.26 தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்
தஞ்சாவூர், ஜன.21 - தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜனவரி 26 வெள்ளிக்கிழமை, குடியரசு தினத்தன்று காலை 11 மணிக்கு, மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனர். எனவே, இதில் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று, கிராம சபைக் கூட்டத்தினை சிறப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.
41 மாத பணி நீக்க காலத்தை ஓய்வூதிய பலனுக்கு கணக்கீடு செய்ய பரிசீலித்திடுக! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விருதுநகர், ஜன.21- தமிழ்நாட்டில் சாலைப் பணியாளர்கள் 41 மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்பு, போராடி மீண்டும் பணியை பெற்றனர். இந்நிலை யில், பணி நீக்க காலத்தை ஓய்வூதிய பலன்களுக்காக கணக்கீடு செய்திட மாநில அரசு பரிசீலனை செய்திட வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002-இல் அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரிந்து 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட னர். இதனை தொடர்ந்து நீதிமன்றம் 2004 செப்டம்பர் 8 பணி வழங்க வேண்டு மென உத்தரவிட்டது. இதனை ஏற்காமல் உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தது. சாலைப் பணியாளர்களும் உச்ச நீதிமன்றம் சென்றனர். மேலும் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்தநிலையில், 2006 சட்டமன்ற தேர்தல் வந்தது. இதனால் அதிமுக அரசு வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் சாலைப் பணியாளர்களுக்கு வேலை கொடுத்தது. ஆனால், பணி நீக்க காலத்தை பணிக் காலமாக கருதவில்லை. இதைத் தொடர்ந்து 2006-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 41 மாத பணி நீக்க காலத்தை ஊதியமில்லா பணிக் காலமாக முறைப்படுத்தி அர சாணை வெளியிட்டது. இதனால் 41 மாதங்கள் ஓய்வூதிய பலன்களுக்கு சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 17 வருடங்களுக்கு மேலாக சாலைப் பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் போராடியும் வந்தனர். இதையடுத்து, சாலைப் பணியாளர்களாக இருந்து சாலை ஆய்வா ளர்களாக உயர்ந்துள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வா ளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சி.குருசாமி 41 மாதப் பணி நீக்க காலத்தை ஓய்வூதிய பலன்களுக்கு மட்டும் பொருந்தும் வகையில் அர சாணை வெளியிட வேண்டி அரசுக்கு விண்ணப்பித்தார். அரசு பரிசீலிக்காத நிலையில், வேறு வழியில்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2022-இல் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசா ரித்த நீதியரசர் எம்.எஸ்.ரமேஷ், இதுகுறித்து 8 வாரத்தில் பரிசீலனை செய்து மனுதாரருக்கு பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எலி மருந்து கலந்த தண்ணீரை குடித்த பள்ளி மாணவன் பலி
தூத்துக்குடி, ஜன. 21 சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராஜன். இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் இரண்டா வது மகன் விக்னேஷ் வயது 13. இவன் சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 18ஆம் தேதியன்று இரவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது தண்ணீர் தாகம் எடுக்கவே வீட்டில் செம்பில் இருந்த தண்ணீருக்குள் எலி மருந்து பாக்கெட் கிடந்ததை பார்த்து வெளியே போட்டுவிட்டு தண்ணீரை குடித்து விட்டான். குடித்ததும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தான். ஓடி வந்து பார்த்த பொழுது தண்ணீரில் எலி மருந்து பாக்கெட் விழுந்து இருப்பது தெரியவந்தது. உடனே நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பல னின்றி ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக இறந்துபோனார். தகப்பனார் ராஜன் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பிரேதத்தை கைப்பற்றினர்.
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மயங்கி விழுந்து பலி
தூத்துக்குடி, ஜன.21 தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் உடல்நல பிரச்னை காரண மாக திடீரென்று மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரி ழந்தார். தூத்துக்குடி அன்னைதெரசா காலனியைச் சேர்ந்த வின்சென்ட்ராஜ் மகன் சுரேஷ்(60), மீனவர். இவர் கடந்த 19ம்தேதி பிரபாகர், அந்தோணி சூசைவியாகுல ஜெய்கர் ஆகிய 2 பேருடன் சேர்ந்து தெற்கு பீச் ரோட்டில் இருந்து சிறிய படகில் நான்கு கடல் மைல் தூரத்தில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது ஏற்கெனவே உடல்நல பிரச்சனை இருந்த சுரேஷ் திடீரென மூச்சுத்திணறி மயங்கி விழுந்துள்ளார். மற்ற மீனவர்கள் உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரி வித்தனர். இதுகுறித்து தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் கோயில் மணிகளை திருடிய நபர் கைது
தூத்துக்குடி, ஜன.21 தூத்துக்குடி பொதுப்பணித்துறை அலுவலக வளா கத்தில் பிள்ளையார் கோயிலில் இருந்த ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள 2 கோயில் மணிகளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் ராஜ்குமார்(எ) சைக்கிள்ராஜா(50). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி டபிள்யு.ஜி.சி. சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் இருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள ஒரு வெண்கல மணியை திருடிச் சென்றுள்ளார். மேலும் அவர் கடந்த 20ம்தேதி மீண்டும் வந்து கோயிலில் கட்டியிருந்த ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள மற்றொரு மணியை திருட முயற்சி செய்துள்ளார். அப்போது அக்கம்பக்கத்தினர் சுற்றி வளைத்து பிடித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி பொதுப்பணித்துறை அலுவலக இளநிலை உதவியாளர் ரமேஷ்(33) அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் துணை ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள 2 கோயில் மணிகளை திருடிய ராஜ்குமார்(எ) சைக்கிள்ராஜாவை கைது செய்தார்.