கரூர், செப்.14- கரூர் மாவட்டம், தோகை மலை ஒன்றியம், பொன்னாம் பட்டியில் 24 ஆண்டுகள் பழ மையான பள்ளிக்கட்டி டத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தோகை மலை ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: கரூர் மாவட்டம், தோகை மலை ஒன்றியம், பொன்னாம் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வேலைவாய்ப்பு உறுதிய ளிப்பு திட்டத்தின் கீழ் 1999- 2000 ஆம் ஆண்டு கட்டப் பட்டது. இந்தப் பள்ளியை அப்போதைய சென்னை மாநகர் மேயரும் இன்றைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தப் பள்ளியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகி றார்கள். இப்பள்ளி கட்டி முடித்து 24 ஆண்டுகள் ஆகி றது. அதிமுக ஆட்சியில் 2019- 202-ஆம் ஆண்டு ஆர்சிஎஸ்ஐ டிசி திட்டத்தின் கீழ் ரூ.96 ஆயிரம் மதிப்பில் பராம ரிப்புப் பணி தரமற்ற முறை யில் செய்துள்ளனர். இதனால் இரண்டு ஆண்டுகளில் கட்டிடத்தின் மேல் பகுதியில் மழை நீர் தேங்கி சுவர்களிலும், பள்ளி யின் உட்பகுதியிலும் மழை நீர் ஒழுகுகிறது. இதனால் பள்ளியின் மேல் கூரை சேத மடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. கல்வி கற்க வரும் மாணவ, மாணவிகளின் உயி ருக்கு உத்தரவாதம் இல் லாத சூழ்நிலையில் பள்ளி யின் சுவர் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. பள்ளி யின் தரைப் பகுதி சிமெண்ட் பெயர்ந்து குழியாக உள் ளது. மாணவ, மாணவிகள் நடந்து செல்லும் போது தடு மாறி கீழே விழும் நிலைமை உள்ளது. பள்ளியின் சுவர்கள் வலு வற்ற நிலையில் இருப்பதால் மாணவ, மாணவிகளின் பாது காப்பை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த கட்டி டத்தை இடித்து அப்புறப் படுத்தி விட்டு, புதிய வகுப்ப றைகள் கட்டிக் கொடுக்க கரூர் மாவட்ட நிர்வாகமும், தோகைமலை ஊராட்சி ஒன் றிய நிர்வாகமும், கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.