மயிலாடுதுறை, நவ.26 - மயிலாடுதுறை மாவட்டம், திருக்க டையூர் ஊராட்சி அபிஷேகக்கட்டளை கிராமத்திலுள்ள கேணிக்கரை குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. திருக்கடையூர் மெயின்ரோட்டில், அபிஷேகக்கட்டளை கிராமம் மெயின் ரோடு திருக்கடையூர் காலனி பகுதி களிலுள்ள 300-க்கும் மேற்பட்ட குடும் பங்களின் நீர் ஆதாரமாக திகழ்கிறது கேணிக்கரை குளம். தற்போது, இக்குளம் தூர்வாரப்படா மல் கேட்பாரற்று கிடக்கிறது. குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் இருப்ப தாகவும் அதனை அகற்றி தூர்வார வேண்டுமென கட்சியின் தரங்கம்பாடி ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.பரம சிவம், அபிஷேகக் கட்டளை கிளைச் செயலாளர் எலியாஸ் செல்லத்துரை ஆகியோர் ஊராட்சி ஒன்றிய ஆணைய ருக்கு கோரிக்கை மனு அனுப்பி யுள்ளனர். பொதுமக்களின் சார்பாக முன் வைத்துள்ள இக்கோரிக்கையை தாமதிக் காமல் நிறைவேற்ற வேண்டுமெனவும் கூறியுள்ளனர்.