districts

img

பயணியர் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

பாபநாசம், டிச.27 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - சாலியமங்கலம் மெயின் சாலையில் தனியார் கல்லூரி அருகில் பெருமாங்குடி யில் உள்ள பயணியர் நிழற்குடை பொது மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த நிழற்குடை ஆங்காங்கே உடைந் தும், பயணிகள் உட்கார முடியாதபடி இருக்கை உடைந்தும் உள்ளது. இதனால் பயணிகள் வெளியில் நிற்கின்றனர். பயணி களின் சிரமத்தை உணர்ந்து, பயணியர் நிழற்குடையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று பாபநாசத்தி லிருந்து சாலியமங்கலம் 16 கிலோ மீட்டர். பாபநாசம் - சாலிய மங்கலம் மெயின் சாலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்தச் சாலையில் உள்ள சில நிழற்குடைகள் பழுத டைந்தும், மக்களின் பயன்பாட் டில் இல்லாமலும் உள்ளன. சில  நிழற்குடைகளை மட்டுமே பொது மக்கள் பயன்படுத்துகின்றனர். சில நிழற்குடைகள் மது பிரியர்களின் கூடார மாக உள்ளது.  மக்களின் பயன்பாட்டில் உள்ள பழுத டைந்த நிழற்குடைகளை சீரமைத்தும்,  மக்களின் பயன்பாட்டில் இல்லாத நிழற்குடை களை இடித்து அப்புறப்படுத்தவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.