districts

img

நாட்டுச்சாலை மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.24 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை ஒன்றியம், நாட்டுச்சாலை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  புதிய கிளை அமைப்புக் கூட்டம் சந்திர சேகரன் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, கட்சிக் கிளையை துவக்கி வைத்து கொடி யேற்றினார். தொடர்ந்து கட்சி அமைப்பு,  திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசி னார். புதிய கிளைச் செயலாளராக சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டார். 20 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டது. நாட்டுச்சாலை கீழ்த்தெருவில் குடியிருப்பவர்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். பழுத டைந்த நிலையில் உள்ள தார்ச்சா லையை சீரமைக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  இதில், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ரெ.ஞானசூரியன், மோரிஸ் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.