districts

img

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவச சிகிச்சை வழங்க கோரிக்கை

கரூர், ஜூன் 14 -  புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இலவச  சிகிச்சை வழங்க வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியு றுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை  கொண்டு தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வரும்  புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் (NHIS),  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் அரசாணையை அனு மதிக்காமல் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, சிகிச்சைக் கான கட்டணத்தில் 20 முதல் 40 சதவீதம் மட்டுமே அனுமதித்து மிகப்பெரிய மோசடி யில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. இம்முறைகேடு மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் IFHRMS முறையில் தாமதமாக மாதந்தோறும் வரு மான வரி பிடித்தம் செய்யும் முறையை கை விட்டு, பழைய நடைமுறைப்படி, ஆசிரி யர்களின் விருப்பப்படி வருமான வரி செலுத்திட அரசு உடனே நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர்  மாவட்ட குழு சார்பில் கரூர் தலைமை தபால்  அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.ஏ.இராஜா தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் ஜ.ஜெயராஜ், டிஎன்ஜிடிஎப் சங்க  மாவட்டச் செயலாளர் சு.ரகு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர்கள் பீ.அருள் குழந்தை தேவதாஸ், சத்தியமூர்த்தி, யசோதா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.