districts

அரியலூர் - தஞ்சை - பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை திட்டம்

தஞ்சாவூர், ஜன.19- அரியலூர்-தஞ்சாவூர் பட்டுக் கோட்டை- புதிய அகல ரயில் பாதை மற்றும்  மன்னார்குடி- பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை அமைத் திட வருகிற நாடாளுமன்ற பட் ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட ரயில் பய ணிகள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ரயில்பாதை அமைத்திட ஆங்கிலேயர் காலத்திலேயே திட்டமிடப்பட்டது. இதுநாள் வரை இத்திட்டம் நிறை வேற்றப்படவில்லை. தஞ்சாவூர் -ஒரத்தநாடு பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை 47.20 கிலோமீட்டர் தூரம் கொண்டது. 2013ஆம் ஆண்டு  325.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் பாதையை அமைத்திட ரயில்வே வாரியம்  ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த 452.08 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. ஒன்றிய அரசு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப் படாத காரணத்தினால் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்த திட்டம் நிறைவேற் றப்பட்டால் பட்டுக்கோட்டை, பாப்பா நாடு, ஒரத்தநாடு, மேலஉளூர், தஞ்சா வூர், திருவையாறு, திருமானூர், அரிய லூர் பகுதி மக்கள் பயனடைவர். பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து சென்னை, திருச்சி, கோயம் புத்தூர், சேலம் மற்றும் நாட்டின் இதர பகுதிகளுக்கு எளிதில் ரயில் மூல மாக சென்று வரலாம். அரியலூர் சிமெண்ட் ஆலைகளில் இருந்து உற் பத்தியாகும் சிமெண்ட் நாட்டின் தென் கோடி பகுதிகளுக்கு இத்தடத்தின் வழியாக எளிதாக எடுத்துச்செல்ல முடியும். அது போல மற்ற சரக்குப் போக்குவரத்திலும், பயணிகள் போக்குவரத்திலும் இந்த தடம் பயனுள்ளதாக இருக்கும். மன்னார்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை 41.00 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. 2012ஆம் ஆண்டு இதற்கான விரிவான சர்வே நடைபெற்றது. 2013-2014 ஆம் ஆண்டு முதல் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு பாமணி ஆறு, கண்ணனாறு, நசுவினி ஆறு  ஆகிய வற்றில் பாலங்கள் கட்ட 2013ல் டெண்டர் விடப்பட்டு பாமணி ஆற்றில் மட்டும் அடித்தளம் மற்றும் தூண் கள் அமைக்கப்பட்டது. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால்  இத்திட்டமும் செயல்படுத்தப் படவில்லை.  இத்திட்டம் செயல்படுத்தும் போது மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பதி, கோயம் புத்தூர், மற்றும் வட மாநிலங்களுக்கு புறப்படும் ரயில்கள் பட்டுக்கோட்டை யில் இருந்து புறப்படும்.  அரியலூர் - தஞ்சாவூர்- பட்டுக் கோட்டை புதிய அகல ரயில் பாதை மற்றும் மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை அமைத்திட தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் மற்றும் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பய ணிகள் நலச் சங்கம், வர்த்தக சங்கங் கள், தன்னார்வ அமைப்புகள் தொ டர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.  2024ஆம் ஆண்டிற்குள் இந்தியா வில் உள்ள அனைத்து ரயில் பாதைக ளையும் மின்மயமாக்க வேண்டும் என ரயில்வே துறை திட்டம் தீட்டி செயல் பட்டு வருகிறது. நாட்டில் பெரும் பாலான ரயில் பாதைகள் மின் மயமாக் கப்பட்டுள்ளது. திருவாரூர் -காரைக்குடி அகல ரயில் பாதை மற்றும் திருத்துறைப் பூண்டி- அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதை இன்னும் மின்மயமாக்கப்படா மல் இருக்கிறது. திருவாரூர்- காரைக்குடி ரயில் தடத்தில் கேட் கீப்பர்கள் நியமனம் செய்யப்பட்டு, விரைவில் ரயில்கள் இயக்கப்படவிருக்கும் சூழ்நிலையில் இத்தடத்தையும் மின்மயமாக்க வேண்டும். டெல்டா பகுதிகள் வளர்ச்சி அடைய, நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கையில் அரியலூர்- தஞ்சா வூர்- பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை, மன்னார்குடி- பட்டுக் கோட்டை புதிய அகல ரயில் பாதை களை அமைத்திடவும் திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை மற்றும் திருத்துறைப்பூண்டி அகஸ்தி யம்பள்ளி அகல ரயில் பாதைகளை மின்மயமாக்கவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தி னர்  கோரிக்கை மனு அனுப்பி உள்ள னர்.