மயிலாடுதுறை, டிச.16 - மங்கனூர் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மைய பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம் கஞ்சாநகரம் ஊராட்சி, மங்க னூர் கிராமத்தில் பழைய கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் சிதிலமடைந்து அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லா ததால், வாடகை கட்டிடம் ஒன்றில் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. குழந்தைகள் வந்து செல்லக்கூடிய அங்கன்வாடி மையம் எந்தவித அடிப் படை வசதிகளும் இல்லா மல் இருக்கிறது. எனவே பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டி அங்கன்வாடி மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றி யச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் கோரிக்கை விடுத் துள்ளார்.