districts

img

சேதமடைந்த பேருந்து நிழற்குடையை சீரமைத்து தருக!

மாதர் சங்கம் மனு திருவாரூர், அக்.30 - ஓகையில் பயணிகள் பேருந்து நிழற்குடை மற்றும் சோடியம் மின்விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரி மாதர்  சங்கத்தின் குடவாசல் நகரக்குழு சார்பில், பேரூ ராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் திரு வாரூர் மாவட்டம் குடவாசல்  நகரக் குழு சார்பாக செய லாளர் டி.ஜி.தமிழ்செல்வி, பேரூராட்சி செயல் அலுவ லர் பரமேஸ்வரியிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: குடவாசல் பேரூராட்சிக் குட்பட்ட 15 ஆவது வார்டில்  அகரஓகை மாரியம்மன் கோவில் அருகே உள்ள பய ணிகள் பேருந்து நிழற்குடை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் சேத மடைந்து உள்ளது. இந்த நிழற்குடை முன்பு தனி நபர்களால், பழைய மரங்கள்,  ஓடுகள் அடுக்கி வைக்கப்பட் டுள்ளன. மேலும், செடி-கொடிகள் வளர்ந்துள்ளன. இதனை அப்புறப்படுத்தி பேருந்து நிழல்குடையை சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதே பகுதி யில் உள்ள சோடியம் மின் விளக்கு பழுதாகி உள்ளது. இதையும் சீர்செய்து சோடி யம் மின் விளக்கை செயல் பாட்டுக் கொண்டு வர வேண்டும்.”  இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.