தஞ்சாவூர், ஜன.3- பொதுமக்கள், வணிகர்கள், பெண்களுக்கு இடையூறாக 40 ஆண்டுகளாக இயங்கி வந்த டாஸ்மாக் கடை கடந்த டிச.31 அன்றுடன் மூடப்பட்டது. தஞ்சை மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில், மாட்டு மேஸ்திரி சந்து வாசலில், கடந்த 40 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இக்கடை வாசல் வழியே மிகவும் நெருக்கடி யான சந்தில் வணிகர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கடை வைத்திருந் தனர். மேலும் டாஸ்மாக் கடை வாச லிலேயே மெடிக்கலும், அதில் பல மருத்துவர்கள் மருத்துவமும் பார்த்து வந்தனர். டாஸ்மாக் கடை வழியாகத்தான், வீரராகவா பள்ளி மாணவ, மாணவிகள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. மேலும், கடை அருகிலேயே கோவில்கள், குடியிருப்புகள் இருந்தன. இதன் வழியே பெண்கள் செல்வதற்கே அச்சப்படும் நிலை இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக் கடை முன்பு, குவியும் கூட்டம் அதிகரித்த தால் வணிகர்கள் கடை நடத்த முடியா மல் மிகவும் அல்லல்பட்டு வந்தனர். இதையறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, மாதர் சங்கம், மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் மற்றும் மாட்டு மேஸ்திரி சந்து வணிகர்கள், கடந்த ஜூன் 28 அன்று டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட் டத்தை நடத்தினர். இப்போராட்டம் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. பின்னர் கடை வாசலிலேயே டாஸ் மாக் மண்டல மேலாளர், தஞ்சை மாநகர டிஎஸ்பி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி, 20 நாட்களுக்குள் கடையை மூடுவதாக ஒப்புக் கொண்டதால் போராட்டம் கை விடப்பட்டது. ஆனாலும், கடை மூடப் படாமல் தொடர்ந்து இயங்கி வந்தது. இதனால் மீண்டும் ஆகஸ்ட் மாதம் போராட்டம் அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், “இரண்டு மாதத்தில் கடைக்கு மாற்று இடம் தேர்வு செய்து, மாட்டு மேஸ்திரி சந்து டாஸ்மாக் கடையை பூட்டி விடு கிறோம்” என்று உறுதியளிக்கப்பட்டது. அதன் பின்பும், டாஸ்மாக் நிர்வா கம் மற்றும் தஞ்சை வட்டாட்சியர் கடையை மூட நடவடிக்கை எடுக்காத தால், நவம்பர் மாதம் மீண்டும் தொடர் போராட்டத்தை குடும்பத்தோடு நடத்த திட்டமிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் மண்டல மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தியதில், டிச.30 அன்று கடையை மூடுவதாக ஒப்புக் கொண்டனர். அதன்படி கடந்த டிச.31 அன்று இர வுடன் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்தப் புத்தாண்டு (2024) மதுக் கடை இல்லாத புத்தாண்டாக இப்பகுதி மக்களுக்கு பிறந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வணிகர்களின் தொடர் போராட் டத்தினால் கடை மூடப்பட்டது, அப்பகுதி வணிகர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அப்பகுதி வணிகர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, இ. வசந்தி, மாநகரச் செயலாளர் வடி வேல், மாநகரக் குழு உறுப்பினர்கள் வி.கரிகாலன், சி.ராஜன், மாட்டு மேஸ்திரி சந்து வணிகர்கள் சங்க தலைவர்கள் எம்.பாபுஜி மோகன், கனகு, அஷ்ரப் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர். போராட்டத்திற்கு ஆதரவளித்த வணிகர்களுக்கும், நடவடிக்கை எடுத்த டாஸ்மாக் மண்டல மேலா ளர், தஞ்சை மாநகர காவல்துறை நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து அதி காரிகளுக்கும் நன்றி தெரிவிக்கப் பட்டது.