கரூர், செப்.23 - கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநக ராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். கரூர் பேருந்து நிலையத்தில், பயணிகள் நடைபாதையில் நடந்து செல்வதற்கு இடை யூறாக வாடகைதாரர்கள் வைத்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடை பெற்றது. மாநகராட்சி நகரமைப்பு ஆய்வா ளர் மார்ட்டின், வருவாய் ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழி யர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பேருந்து நிலைய நடைபாதை யில் வைக்கப்பட்டிருந்த டீ பாய், தள்ளு வண்டி, பேக்கரி கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த டேபிள்கள், உணவுப் பொருட்கள், பூக்கடை பொருட் கள் என பல்வேறு ஆக்கிரமிப்புகளை பறிமுதல் செய்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற உள்ளதாக ஏற்கனவே வாடகைதாரர்களுக்கு அறிவுறுத்தி யிருந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் இந்நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி யின் போது வாடகைதாரர்கள் அவசர அவசர மாக நடைபாதையில் வைத்திருந்த பொருட் களை கடைக்குள்ளே எடுத்துச் சென்றனர். கரூர் நகரப் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.