districts

பெண்ணின் வயிற்றிலிருந்த 8 கிலோ கட்டி அகற்றம் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

திருச்சிராப்பள்ளி, மார்ச் 29 - கரூர் மாவட்டம் நெய்த லூர் காலனியை சேர்ந்த வர் காளியம்மாள் (43). இவர்  கூலி வேலை செய்து வரு கிறார். இவர் கடந்த மூன்று மாதமாக தனது வயிறு வீங்கி இருப்பதாலும், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் சிர மம் இருப்பதாலும் 16.2.2022  அன்று திருச்சி மகாத்மா  காந்தி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் குழு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து  பார்த்ததில் கர்ப்பப்பையில் மிகப்பெரிய கருப்பை நார்த்திசு கட்டி ஒன்று இருப்பது கண்டறியப்பட் டது. இதையடுத்து மருத்து வமனை முதல்வர் மரு.வனிதா வழிகாட்டுதலின்படி மகப்பேறு துறை தலைவர் உமா மோகன்ராஜ் மற்றும்  மயக்கமருந்து துறை தலை வர் சிவகுமார் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், மகப் பேறு மற்றும் மகளிர் நோயி யல் இணை பேராசிரியர் மரு.  பாக்கியவதி தலைமையில் உதவி மருத்துவர்கள் உமா மகேஸ்வரி, நந்தகுமார், புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் செந்தில் ்குமார் ஆகியோர் அடங்கிய  மருத்துவர் குழு மார்ச் 4  அன்று 2 மணி நேரம் அறுவை  சிகிச்சை மேற்கொண்டு 40 செ.மீ நீளமும் 30 செ.மீ அகல மும் கொண்ட 8 கிலோ எடை  கொண்ட கட்டியை அகற்றினர். மார்ச் 19 அன்று பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அந்த பெண் நல முடன் உள்ளார்.  இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள தனியார் மருத்துவமனையில் ரூ. 3  லட்சம் வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவம னையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;