districts

திருச்சி முக்கிய செய்திகள்

மருத்துவ காப்பீடு பதிவு முகாம் 

திருத்துறைப்பூண்டி, டிச.30 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்  11 ஆவது வார்டு பகுதி யில் முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப் பீடு மற்றும் பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் அனை வருக்கும் அடையாள அட்டை பதிவு செய்து வழங்கும் முகாம் நடை பெற்றது. முகாமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ராமலோகஈஸ்வரி ரகுராமன் துவக்கி வைத் தார். முகாமில் 200-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டு அடை யாள அட்டை புதுப்பித் தல், பரிசோதனை, புதிய  அட்டை ஆகியவற்றை  பெற்று பயனடைந்த னர். திட்ட ஒருங்கிணைப் பாளர் தமிழரசன் மற்றும்  பணியாளர்கள் கவிதா, ஹேமலதா கலந்து கொண்டனர்.

ஆதரவற்றோருக்கு உதவி

பாபநாசம், டிச.30 - பாபநாசம் புதிய பேருந்து நிலையம், அரசு  மருத்துவமனை, கோ யில் தேவராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் படுத்திருந்த முதிய வர்கள், மாற்றுத் திறனா ளிகள் உள்ளிட்ட சாலை யோரங்களில் குளிரால் நடுங்கியபடி இருந்த ஆதரவற்றோருக்கு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் போர்வைகள் வழங்கப்பட்டன. இதில் பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகமது, செயலர் ஜெக தீசன், பொருளாளர் ஜோதி, மற்றும் மாவட்டத்  தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் விஜயகாந்த் மறைவு மீனவர்கள், வர்த்தகர்கள் அஞ்சலி

மயிலாடுதுறை, டிச.30 - நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் மறைவை யொட்டி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி யில் மௌன அஞ்சலி  ஊர்வலம் நடைபெற்றது. தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தலை மையில், கடைவீதியில் இருந்து டேனிஷ் கோட்டை கடற்கரை வரை  ஏராளமானோர் ஊர்வல மாக சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்திற்கு மீனவர்கள், பொதுமக்கள், அனைத்து  கட்சியினர், வர்த்தகர் கள், ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். குட்டியாண்டியூர், பெரு மாள்பேட்டை, மாணிக்கப் பங்கு உள்ளிட்ட பகுதி யைச் சேர்ந்த ஏராள மான மீனவர்கள், பொது மக்கள் கலந்து கொண்ட னர்.

அறந்தாங்கி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங் கியில் அனைத்துக் கட்சி கள், வர்த்தக சங்கத்தி னர் நூற்றுக்கும் மேற் பட்டோர் காரைக்குடி சாலை செக் போஸ்டில் இருந்து துவங்கிய மௌன ஊர்வலம் நக ரின் முக்கிய வீதிகளான வாகை மரம், பெரிய கடைவீதி, காமராஜர் சிலை, பேருந்து நிலை யம் வழியாக வந்து அம்மா உணவகம் அருகே  நிறைவு பெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருவாரூர், டிச.30- திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட பள்ளி கல்வித் துறை மற்றும் போக்கு வரத்து சாலைப் பாது காப்புத் துறை, வட்டார போக்குவரத்துத் துறை இணைந்து பள்ளி வாகன  மேலாளர்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு முகாமை நடத்தின. இதற்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை வகித் தார். மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் எஸ்.ஜெய குமார், முதன்மை கல்வி அலு வலர் புகழேந்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
முதியவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தஞ்சாவூர், டிச.30 -  சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இரண்டு  முதியவர்களுக்கு ஆயுள்  தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்கா விரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (65), முருகன் (60).  இருவரும் 8 மற்றும் 9 வயது டைய இரண்டு சிறுமி களுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து, காவிரி ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து பாலி யல் தொல்லை அளித்து வந்துள்ளனர். கடந்த மார்ச் 16 அன்று இரவு சிறுமிகள் இருவரும் ஆற்றுப் பகுதியில் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து சந்தேகமடைந்த அப்பகு தியைச் சேர்ந்தவர்கள் சிறு மிகளிடம் விசாரித்தனர். இதில், சிறுமிகள் இருவருக் கும் முருகன், செல்வம் பாலி யல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. பிறகு சிறுமிகளின் பெற் றோர் அளித்த புகாரின் பேரில், கும்பகோணம் மகளிர்  காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப் பதிவு செய்து, கடந்த மார்ச் 17 அன்று செல் வம், முருகன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு  நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ரா ஜன், முதியவர்கள் செல்வம்,  முருகன் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை யும், தலா 10 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதித்தும் தீர்ப்ப ளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 4 லட்சம்  ரூபாய் அரசுத் தரப்பில் இழப் பீடு வழங்க வேண்டும் என வும் நீதிபதி உத்தரவிட்டுள் ளார்.

ஜன.2-இல் பிரதமர் மோடி வருகை திருச்சி விமான நிலையத்தில்  சிறப்பு பாதுகாப்பு படை ஆய்வு

திருச்சிராப்பள்ளி, டிச.30 - திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட் டுள்ள புதிய முனையத்தின் திறப்பு விழா ஜனவரி 2 அன்று நடைபெற உள்ளது.  இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து  கொண்டு, புதிய முனையத்தை திறந்து வைப் பதுடன் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொ டங்கி வைக்கவும் இருக்கிறார். இந்த விழா வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்  முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்ற னர். தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறி விப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட் டுள்ளது. மேலும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக 2.81 லட்சம்  மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப் படவில்லை. இந்நிலையில் அவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் ஜன.2 அன்று நடை பெறுகிறது. இவ்விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு  பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்று கிறார். பிரதமர் மோடி திருச்சி வருவதை முன் னிட்டு, திருச்சி விமானநிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் திருச்சி மாநகர போலீசார் மற்றும் மத்திய தொழில்  பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்ட னர்.  சிறப்பு பாதுகாப்பு படை திருச்சி வருகை திருச்சிக்கு பிரதமர் வருவதை ஒட்டி பாது காப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாது காப்பு படையினரும், வெளிப்பகுதியில் மாநகர காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள பிரத மரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் (எஸ்பிஜி) முதல் குழு வெள்ளிக்கிழமை இரவு திருச்சி வந்துள்ளது.  திருச்சிக்கு வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு படையின் முதல் குழுவினர் சனிக்கிழமை விமான நிலையம் இரண்டாவது புதிய முனையம் திறப்பு விழா நடைபெறும் பகுதி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் இடம் ஆகிய  இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

நிலுவையில் உள்ள வழக்குகளை  விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

கரூர், டிச.30 - மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களின் நிலுவையில் உள்ள வழக்குகளை உரிய காலத்திற்குள் விசாரித்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விரைந்து நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதி பெற்றுத் தர வேண்டுமென ஆட்சியர் மீ.தங்கவேல் அலுவலருக்கு அறிவுறுத்தினார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முக வடிவேல், கோட்டாட்சியர் செல்வி.ரூபினா (கரூர்) ஆகியோர் பங்கேற்றனர்.

நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் திருத்துறைப்பூண்டி நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, டிச.30 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன் தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், எண்.6,14, 24 ஆகிய  வார்டுகளில் புதிய சாலை அமைக்க வேண்டும். 17  ஆவது வார்டில் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார். கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ராமலோ கஈஸ்வரி ரகுராமன், 11 ஆவது வார்டில் அனைத்து வீடு களுக்கும் புதிய பைப் லைன் அமைத்து குடிநீர் இணைப்பு  வழங்க வேண்டும். குளத்தில் உள்ள வெங்காயத் தாம ரைகளை அகற்றி, படித்துறை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். புதிதாக சாலை அமைக்க வேண்டும். நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக துவங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்தார். நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன், ‘அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டு விரைவில் சரி செய்து கொடுக்கிறோம்” என்றார்.

உப்பள தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணம்

தூத்துக்குடி, டிச. 30- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர்மாவட்டம் சார்பாக  தூத்துக்குடியில் மழை  வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட 340  உப்பள தொழிலாளர் குடும்பங்க களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நிவார ணப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ச.மயில், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுக் குழு உறுப்பினர் தோ.ஜாண் கிறிஸ்துராஜ், மாவட்டத் தலைவர் இரா.இராஜ்குமார், மாவட்டச் செயலாளர் அ. பிரபு  செபாஸ்டியன், மாநில செயற்குழு உறுப்பி னர் ப. கனகராஜா,திருப்பூர் வடக்கு ஒன்றிய  செயலாளர் ர.பாலசுப்பிரமணியன், திருப்பூர்  தெற்கு மாநகர துணைச்செயலாளர் பொ. ரமேஷ், அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசி ரியர் இ.அன்புச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு:ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி, டிச.30 - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  கடைசி நேர அவசரம் தவிர்க்கும் பொருட்டும், அரசிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடும் பொருட்டும் 2024 ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை, போட்டி நடத்தப்படும் 20 தினங்களுக்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.  ஜல்லிக்கட்டு வடமாடு போட்டிகளை நடத்தும் விழா குழுவினர் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசாணை எண்:7 நாள்:21.07.2017-இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி போட்டியை நடத்த வேண்டும். அரசிடம் முன் அனுமதி பெற்று மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும். அரசாணை வெளியிடப்பட்டு கடந்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற கிராமங்களில் மட்டுமே தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும். அரசிடமிருந்து முன் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  மேற்குறித்த அறிவுரைகளை பின்பற்றி, போட்டி நடத்த உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அளித்திட வேண்டுமென திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.