அரியலூர், ஜன.21 - அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நடுவலூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். மாற்றுத் திறனாளியான இவர், ஜெயங்கொண் டம் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலை யத்தில் ஒரு கடையை ஏலம் எடுப்ப தற்காக வந்துள்ளார். ஆனால் நகராட்சி அலுவலகத்தில் இரண்டாவது மாடியில் ஏறும் நிலை உள்ளதால், என்னால் மேலே ஏறி செல்ல முடியவில்லை. மாற்றுத்திற னாளி செல்வதற்கான பாதையும் கட்டி டத்தில் இல்லை. அதனால் என்னுடன் வந்த உறவினர்கள் என்னை தூக்கிக் கொண்டுதான் சென்றார்கள். நான் பேருந்து நிலையத்தில் ஒரு கடை கேட்டு இதுவரை 4 முறை ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். அதேபோன்று ஒவ்வொரு ஆணையரிடமும் மனு கொடுத்துள்ளேன். தற்போது உள்ள ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினரிடமும் மனு கொடுத்துள்ளேன். நகராட்சி ஆணைய ரிடம் மனு கொடுத்ததை அடுத்து ஏலத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்தது. அதனால் நான் வந்துள்ளேன். ஆனால் ஏலத்தில் எனக்கு கடை கிடைக் குமா? கிடைக்காதா? என்ற சந்தேகத் தில் உள்ளேன். குடும்பத்தில் எனக்கு துணைக்கு வேறு ஆள் யாரும் இல்லை. எனக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். எனது மனைவி அவரது தாய் வீட்டில் உள்ளார். நான் கோயம்புத்தூரில் ஒரு தங்கும் விடுதியில் உள்ளேன். நான் உழைத்தால் மட்டுமே என் குடும் பத்தை வழிநடத்த முடியும். கடந்த 13 ஆண்டுகளாக சென்னை யில் ஹோட்டல் வேலை செய்த அனுப வம் எனக்கு உண்டு. அந்த அனுபவத் தைக் கொண்டு பேருந்து நிலையத்தில் ஒரு கடை வைத்து நடத்தலாம் என நினைக்கிறேன். அரசு இதற்கு உதவி செய்ய வேண்டும். எனக்கு ஒரு கடை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் எனது தாய்-தந்தையர் நான் சிறு வயதாக இருக்கும்போது இறந்து விட்டனர். இருந்தும் மோட்டார் மெக்கா னிக் படித்துள்ளேன். கண்டிப்பாக எனக்கு ஒரு கடை ஒதுக்கி கொடுத் தால், அந்த இடத்தில் ஹோட்டல் வைத்து நடத்தி சம்பாதிக்க என்னால் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். இதையடுத்து கடைகள் அதிக விலைக்கு ஏலம் போனதால், அவருக்கு கிடைக்காமல் போனது. அதிக விலை கொடுத்து என்னால் எடுக்க இயல வில்லை என மனம் நொந்தார். மேலும் தனது உடல்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட, எனது சித்தப்பா மற்றும் உறவினர்கள் என் சொத்து அனைத்தையும் என் அனுமதி இல்லாமலும் என் கையெழுத்து இல்லா மலும் அவர்கள் பெயரில் மாற்றி கொண்டனர். தற்போது எந்த உதவியும் இல்லாமல், யார் துணையும் இல்லா மல் நிற்கதியாக நிற்கிறேன் என்றார் வேத னையுடன். எனவே மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி எனக்கு உதவி செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சிய ருக்கு ராஜேஷ் கண்ணீர் மல்க கோ ரிக்கை விடுத்துள்ளார்.