districts

img

நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

ஒன்றிய பாஜக அரசு மக்கள் விரோதக்கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன்தொடர்ச்சியாக மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் நோக்கத்தோடு மாநில அரசுகளிடம் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு நிர்ப்பந்திக்கிறது. இதனை மாநில அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி செவ்வாயன்று நாகப்பட்டினம்,திருவாரூர்,திருச்சி ஆகிய மாவட்டங்கள் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமலாக்கப் பட்டால் அதன் பாதிப்புகள் பற்றி எடுத்துக்கூறி  கையெழுத்து பெறும் இயக்கம் கடந்த ஒரு  வார காலமாக நடைபெற்றது. நாகப்பட்டினம்  மாவட்டத்தில் அனைத்து ஒன்றிய/நகர/பேரூ ராட்சி பகுதிகளில் மக்களிடம் கையெழுத்து  பெறப்பட்ட படிவங்களை அந்தந்த பகுதி களில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. கீழையூர் மேற்கு ஒன்றியம் சார்பில் மேலப்பிடகை கடை தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டீ.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். நாகை மாவட்ட செயலாளர் வி.  உரையாற்றினார். பின்பு கருங்கன்னி மின் வாரிய அலுவலகத்தில் கையெழுத்து பெறப்பட்ட 1400 மனுக்களை மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.  கீழையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் வேளாங்கண்ணி மின்சார வாரிய அலுவல கத்தில் மனு கொடுக்கும் நிகழ்விற்கு ஒன்றிய  செயலாளர் எம். அப்துல்அஜீஸ் தலைமை தாங்கினார்.  கீழ்வேளூர் வடக்கு ஒன்றியம் சார்பில்  ஒன்றிய செயலாளர் என்.எம்.அபுபக்கர் தலை மையில் இயக்கம் நடைபெற்றது. வகித்தார்.கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான நாகை மாலி விளக்க உரையாற்றினார், கீழ்வேளூர் இளநிலை பொறியாளர் அலு வலகத்தில் மக்களிடமிருந்து பெறப்பட்ட 813 மனுக்களை மின்வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தலைஞாயிறு ஒன்றியக்குழு சார்பில் திருக்குவளை மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய  செயலாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.லதா உரையாற்றினார். திருக்குவளை மின்வாரிய அலுவலகத்தில் 737 மனுக்களை அதிகாரிகளி டம் ஒப்படைத்தனர். கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செய லாளர் ஆர்.முத்தையன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சுப்பிர மணியன் பேசினார். 525 மனுக்களை மின்வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

நாகப்பட்டினம் நகரம்

நாகப்பட்டினம் நகரத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் நிகழ்விற்கு நகர செயலா ளர் க. வெங்கடேசன் தலைமை வகித்தார்.  கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி 605 படிவங்களை அதிகாரிகளிடம் வழங்கினார். சிக்கல் கடைத்தெருவில் ஊர்வலம் நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியம் மற்றும்  வடக்கு ஒன்றியம் சார்பில் சிக்கல் கடைத்தெரு வில் இருந்து வாத்தியங்கள் முழங்க ஊர்வல மாக புறப்பட்டு வடக்கு வீதியில் உள்ள மின்சார அலுவலகத்தை சென்றடைந்தனர். நாகப்பட்டினம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வடிவேல்,வடக்கு ஒன்றிய செயலாளர் வி.வி.ராஜா தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திர போஸ் மின்வாரிய அதிகாரிகளிடம் 2 ஆயிரம் மனுக்களை வழங்கினார். 

வேதாரண்யம் 

வேதாரண்யம் தெற்கு ஒன்றியம் சார்பில்  வாய்மேடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் வி.அம்பிகாபதி தலைமை யில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு,615 மனுக்களை மின்வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.  வேதாரண்யம் வடக்கு ஒன்றியம் சார்பில்  காரியாபட்டினம் மின்வாரிய அலுவல கத்தில் ஒன்றிய செயலாளர் ஏ.வெற்றியழ கன் தலைமையில் 730 மனுக்கள் ஒப்படைக் கப்பட்டன. திருமருகல் மின்சார வாரிய அலுவல கத்தில் மனு கொடுக்கும் நிகழ்விற்கு ஒன்றிய  செயலாளர் எஸ். ஸ்டாலின்பாபு தலைமை வகித்தார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, 280 மனுக்களை மின்வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.  அனைத்து ஒன்றியங்களிலும் கட்சி கிளை செயலாளர்கள்,ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்  றனர்.

திருவாரூர்

திருவாரூர் மின் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்  டத்திற்க்கு ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன்,நகரச்செயலாளர் எம்.தர்ம லிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி உரை யாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட னர். ஆயிரக்கணக்கான கையெழுத்து மனுக்களை மின்வாரிய உதவி பொறியாள ரிடம் அளித்தனர். குடவாசல் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலை யத்திலிருந்து பேரணியாக சென்று மின் வாரிய  அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிபிஎம் நகரக்குழு செயலாளர் டி.ஜி.சேகர்,ஒன்றிய செயலாளர் எம்.கோபிநாத் ஆகியோர் தலைமை வகித்தனர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலை மணி உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பி னர் எப்.கெரக்கோரியா மற்றும் பலர் பங்கேற்றனர்.

நன்னிலம்

நன்னிலம் ஒன்றியம்,பேரளம் மின் அலு வலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம், பேரளம் நகர செயலாளர் சீனி.ராஜேந்தி ரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் கே.தமிழ்ச்செல்வி உரையாற்றினார், மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். வலங்கைமான்  வலங்கைமான் ஒன்றியம், ஆலங்குடி மின்வாரிய அலுவலகம் எதிரே ஒன்றிய செய லாளர் என்.இராதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ். கலியபெரு மாள் பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் கே.சுப்பரமணியன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கொரடாச்சேரி கொரடாச்சேரியில் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால் தலைமை  வகித்தார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.தம்புசாமி  உரையாற்றினார்,மாவட்ட குழு உறுப்பி னர்கள் கே.சீனிவாசன், கே.எஸ்.செந்தில் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

முத்துப்பேட்டை 

முத்துப்பேட்டை மின் அலுவலகம் எதிரே  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செய லாளர் சி.செல்லத்துரை,ஒன்றிய செயலாளர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாஸ் பேசினார்.மாவட்ட குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் உள்ள மின் வாரிய உதவி செயல் பொறியாளரிடம் ஆயிரக்கணக்கான மனுக்கள் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி  திருச்சி மாவட்டம், மணப்பாறை சேது ரத்தினபுரத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் மனு கொடுக்கும் இயக்கத்திற்கு கட்சியின் வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், வட்டக்குழு உறுப்பினர் சுரேஷ் மற்றும் ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் நவமணி ஆகியோர் பேசினர். பின்னர் மின் வாரிய செயற்பொறியாளரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டன.