districts

img

ஷிவானி பள்ளி மீது நடவடிக்கை கோரி சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்

அறந்தாங்கி, அக்.10-  புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி சிவானி வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளியில் பணிபுரிந்த முது நிலை பட்டதாரி ஆசிரியர்க ளின் அசல் சான்றிதழ் தர  மறுக்கும் ஷிவானி பள்ளி யின் அதிகாரப் போக்கை கண்டித்தும், பள்ளியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறந் தாங்கி தாலுகா குழு சார்பாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.  சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கர்ணா, அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் அலாவுதீன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜனார்த் தனன், வசந்தகுமார், வாலி பர் சங்க மாவட்டச் செயலா ளர் குமாரவேல் ஆகியோர் தலைமை வகித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் எஸ். கவிவர்மன் போராட் டத்தை துவக்கி வைத்து பேசி னார். இதில் சிஐடியு மாவட் டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சி பி எம் தாலுகா செயலாளர் நாராயணமூர்த்தி, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் தங்கராஜ், தென்றல் கருப் பையா ஆகியோர் உரை யாற்றினார்கள்.  அதிகாரிகளின் அறி வுறுத்தலை மதிக்காமல் சவால் விடும் பள்ளி நிர்வா கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாவட்ட கல்வி அலுவலகம் தலையிட்டு உடனடி நடவ டிக்கை எடுத்து பட்டதாரி ஆசி ரியர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாத்திடவும், தற் போது கடும் மன உளைச்ச லில் பணியில் உள்ள ஆசிரி யர்களின் குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த காத்தி ருப்புப் போராட்டம் நடை பெற்றது.