புதுக்கோட்டை, ஆக.20 - காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு போதுமான ஊழியர்களை நியமித்திட வலியுறுத்தி சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை 2 ஆவது நாளாக காத்திருக் கும் போராட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவல கத்தில் நடைபெற்ற போராட் டத்திற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் (சிஐடியு) மாவட்டத் தலைவர் எஸ்.யாசிந்த் தலைமை வகித்தார். போராட் டத்தில் சம்மேளனப் பொதுச் செயலாளர் ஆத்ம நாதன் கண்டன உரையாற்றி னார். சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற் றனர். புதுக்கோட்டை மாவட் டத்தில் காவிரி கூட்டுக் குடி நீர் திட்டத்தில் அரசு தீர்மா னித்த எண்ணிக்கையின் அடிப்படையில் ஊழியர் களை நியமிக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் குடிநீர் வடிகால் வாரியமும் உட னடியாக தலையிட்டு தொழி லாளர்களுக்கு அரசு தீர்மா னித்த சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடை பெற்றது.