districts

img

திருச்சியில் வாசிப்பு இயக்கம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 21 -  

    மாணவர்களிடையே நூலக பயன்பாடு மற்றும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் வாசிப்பு இயக்கத்தை திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றி யம் பொன்னுசங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் வாசிப்பு இயக்க புத்தகங்களையும், வாசிப்பு இயக்க காணொலி யினையும் வெளியிட்டு உரையாற்றினார்.  

    இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட ஆர்த்தி, மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார், பள்ளிக் கல்வி இயக்குநர்கள்,  அரசு அலுவலர்கள், ஆசிரிய, ஆசிரியைகள்,  மாணவர்கள் கலந்து கொண்டனர்.