இந்தியா கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இராமநாதபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் நவாஸ்கனி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தெற்கு பகுதிகளில் ஏணி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தனர்.