மயிலாடுதுறை, ஜன.19- மயிலாடுதுறை மாவட் டம் திருக்கடையூரில் பொங் கலையொட்டி தில்லையாடி உத்திராபதியார், நாராயண சாமி நினைவாக 43-ஆம் ஆண்டாக மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா ரேஸ்) நடைபெற்றது. முன்னதாக சின்னமாடு, நடுமாடு, பெரியமாடு மாட்டு வண்டிகளுக்கான பந்தயம் நடைபெற்றது. தொடர்ந்து குதிரை வண்டிகளுக்கான பந்தயங்கள் பிற்பகல் துவங்கி புதுக்குதிரை, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை, என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா, முருகன் பரிசுகளை வழங்கினார்.