தஞ்சாவூர், அக்.25 - தஞ்சாவூரில் மாமன்னன் ராஜ ராஜ சோழனின் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு, புதன்கிழமை காலை அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும், 1038 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட நிர்வாகம், சதய விழா குழு, அரண்மனை தேவஸ்தா னம் சார்பில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஆஷிஷ்ராவத், சதய விழா குழு தலைவர் து.செல்வம், அரண் மனை தேவஸ்தான பரம்பரை அறங் காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, குட்செட் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆலக்குடி ராஜ் குமார் உள்ளிட்டோர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தனர். 1038 பேர் பங்கேற்ற பரதநாட்டியம் சதய விழாவில், செவ்வாயன்று மாலை 1038 பரதநாட்டியக் கலை ஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோயில் வளாகத்தில் மகா நந்திகேசுவரர் மண்டபத்தைச் சுற்றியுள்ள மேடை யில் திறந்தவெளி அரங்கு அமைக்கப் பட்டது. இதில், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, ஏறத்தாழ 25 குழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்ட னர். இது தவிர, தனி நபர்களும் ஏறக்குறைய 50 பேர் நடனமாடினர். சிறுமிகள் முதல் பெரியவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு கலைஞருக்கும் அடை யாள எண் வழங்கப்பட்டது. பாட்டு, மிருதங்கம், தவில், வீணை உள்பட சுமார் 50 இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். இக்கோயிலில் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆயிரமாவது ஆண்டு விழாவில் ஆயிரம் பரத நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர். ஏறத்தாழ 13 ஆண்டு களுக்கு பிறகு இப்போது 2-வது முறையாக 1,038 பேர் பங்கேற்று நட னமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று ஆய்வு புத்தகம், சிறப்பு நாள்காட்டி வெளியீடு கும்பகோணம் அருகே உடையா ளூரில் உள்ள ராஜராஜ சோழன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப் பட்டது. பம்பப்படையூரில் நடை பெற்ற விழாவிற்கு மாநிலங்களவை உறுப்பினரும் பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவரு மான சு.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மயிலாடுதுறை தொகுதி மக்க ளவை உறுப்பினர் செ.ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், திரைப்பட நடிகர் எம்.பசுபதி, தமிழ் வர்த்தக சபை தலை வர் சோழ நாச்சியார் ராஜசேகர், கும்பகோணம் மாநகர துணை மேயர் சுப.தமிழழகன் மற்றும் வரலாற்றுச் சங்க தலைவர் குடவாயில் மு.பால சுப்பிரமணியன், அழகப்பா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா மற்றும் வரலாற்று ஆய்வா ளர்கள், பேராசிரியர்கள் சிறப்புரை யாற்றினர். நிகழ்ச்சியில் சிலம்பாட்டம், பறை யாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச் சிகள், ஓவிய கண்காட்சிகள் நடை பெற்றன. ஓவியப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்பு, மாமன்னரின் வரலாற்று ஆய்வு புத்தகம் மற்றும் சிறப்பு நாள்காட்டி (காலண்டர்) வெளியிடப்பட்டது.