திருச்சிராப்பள்ளி, மே 22- திருச்சி கல்லுக்குழியில் சிஐடியு ரயில்வே காண்ட்ராக்ட் லேபர் யூனியனின் 3-ஆவது மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க தலைவர் மனோகரன் தலைமை வகித்து மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சுபாஷினி, பொதுச்செயலாளர் மதியழகன், பொருளாளர் சரவணன், டிஆர்இயூ செயல் தலைவர் ஜானகி ராமன் ஆகியோர் பேசினர். சுப்பிரமணி வரவேற்றார். மாதவன் நன்றி கூறினார். சிஐடியு மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில், நிரந்தர தன்மை உள்ள வேலைகளில் பணிபுரியும் ரயில்வே காண்ட்ராக்ட் தொழிலாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். மினிமம் வேஜ் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரயில்வே வாரிய உத்தரவுபடி அகவிலைப்படி வழங்க உத்தரவிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், தலைவராக பி.கே.மாதவன், கௌரவ தலைவராக ஜி.சுகுமாறன், பொதுச்செயலாளராக எஸ்.மதியழகன், இணை செயலாளராக ஆர்.ராமச்சந்திரன், பொருளாளராக ஆர்.சரவணன் உள்பட 20 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.