districts

img

திருச்சியில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

திருச்சிராப்பள்ளி, பிப்.28 - அனைத்து ரயில்களி லும் மாற்றுத்திறனாளிக ளுக்கான பெட்டிகளைத் திறந்து மாற்றுத்திறனாளி களை மட்டும் அனுமதிக்க வேண்டும். அனைத்து யுடிஎஸ் கவுண்டர்களிலும் மாற்றுத்திறனாளிகளுக் கான சலுகை பயணச் சீட்டை  உடனே வழங்க வேண்டும்.  ஆன்லைன் முன்பதிவுக்கு தனியாக அடையாள சான்று  வாங்கச் சொல்லி சட்ட விரோதமாக அலைக்கழிப் பதை கைவிட வேண்டும்.  அனைத்து ரயில் நிலையங் களிலும் மாற்றுத்திறனாளி கள் வண்டிகளை நிறுத்த சிறப்பு பார்க்கிங் இடத்தை உருவாக்க வேண்டும்.  நடைமேடை பேட்டரி  வண்டிகளில் சட்டவிரோத மாக கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி திருச்சி  மண்டல, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் திங்க ளன்று திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு சங்க மாநிலச் செயலாளர் ஜீவா  தலைமை வகித்தார். முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட்ட மாநில நிர்வாகிகள், மாநில குழு உறுப்பினர்கள், ஜெய பால், கோபிநாத், குமார்,  ரவி, கணேசன், சந்திரா,  இளங்கோவன், ராஜசேக ரன், சரவணன் மற்றும் 45 பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.