திண்டுக்கல், ஜுன் 8- மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற மக்கள வைத்தொகுதி உறுப்பின ராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.சச்சிதானந்தம் தில்லி யில் தனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான சான்றி தழை பதிவு செய்தார். திமுக தலைமையி லான இந்தியா கூட்டணி யின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் சிபிஎம் வேட் பாளர் ஆர்.சச்சிதானந்தம் போட்டியிட்டு, நான்கரை லட்சம் வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிபெற்றார். திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் பூங் கொடி, ஆர்.சச்சிதானந்தம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். சான்றிதழை பெற்ற ஆர்.சச்சிதானந்தம் ஜூன் 7 வெள்ளிக்கிழமையன்று தில்லிக்குச் சென்று நாடாளுமன்ற அலுவல கத்தில் உள்ள பதிவாள ரிடம் தனது சான்றிதழை கொடுத்து திண்டுக்கல் தொகுதியின் மக்களவை உறுப்பினராக பதிவு செய்து கொண்டார். (நநி)