தஞ்சாவூர், மே 10- தஞ்சை மாவட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை திட்டத்தில், பணி வழங்கக் கேட்டு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில், கீழக்குறிச்சி, வாட்டாக் குடி, பெரியகோட்டை, புல வஞ்சி, கருப்பூர், அண்டமி, மூத்தாக் குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் டி. கஸ்தூரி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, மதுக்கூர் ஒன்றியத் தலைவர் எம். பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணைத் தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியப் பொருளாளர் தில்லையம்மாள் தலைமையில் மனு அளிக்கப் பட்டது. ஒன்றியச் செயலாளர் கோவி.ராதிகா, ஒன்றிய துணைத் தலைவர் தனசேகரன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் மேரி மற்றும் 53 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் கலந்து கொண்டனர். ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய பொறுப் புச் செயலாளர் மதியழகன், பொரு ளாளர் எஸ்.வி.கவிதா, மாவட்டத் தலைவர் த.கஸ்தூரி, மாவட்ட துணைச் செயலாளர் வீ.சிவகுமார் மற்றும் 44 பெண்கள் உள்ளிட்ட 77 பேர், வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் பி.எம். இளங் கோவன், மாவட்ட துணைச் செய லாளர் சி.ஏ.சந்திர பிரகாஷ், நிர்வாகிகள் குமார், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.