தஞ்சாவூர், மார்ச் 14 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் பேராவூரணி பெத்தையனுக்கு, தமிழ்நாடு அரசின் தூயதமிழ் பற்றாளர் விருது வழங்கப் பட்டது. ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில், மாவட்டத்திற்கு ஒருவருக்கு தூயதமிழ் பற்றாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு, தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் பேராவூரணியை சேர்ந்த எழுத்தாளர் பெத்தையன் தேர்வு செய்யப்பட்டர். சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி -செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,எழுத்தாளர் பெத்தையனுக்கு விருதை வழங்கினார்.