districts

புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

புதுக்கோட்டை, ஜன.19 - பருவமழை பொய்த்துள் ளதால் புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை ஆட்சிய ரகக் கூட்ட அரங்கில் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பொன்னுச்சாமி கோரிக்கை களை முன்வைத்துப் பேசிய தாவது: தமிழ்நாட்டின் பல மாவட் டங்களில் கனமழை பெய்து  பெரும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதற்கு நேர்மா றாக புதுக்கோட்டை மாவட்டத் தில் பருவமழை பொய்த்து வறட்சி தாண்டவமாடுகிறது. மாவட்டத்தில் உள்ள 5 ஆயி ரத்திற்கும் அதிகமான ஏரி,  குளம், கண்மாய்கள் தண்ணீ ரின்றி வறண்டு காணப்படு கின்றன. இதனால், மானா வாரி சாகுபடிகள் முற்றிலு மாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாததால் நிலத் தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து ஆழ்துளை மற்றும் கிணற்றுப் பாசன மும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கடன் வலையில் சிக்கி சொல்லொ ண்ணாத் துயரங்களை அனு பவித்து வருகின்றனர். எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறி வித்து தமிழ்நாடு அரசு நிவா ரணப் பணிகளை மேற் கொள்ள வேண்டும். புதுக் கோட்டையை வறட்சி மாவட் டமாக அறிவிக்க வலியுறுத்தி  மாவட்ட நிர்வாகம் அரசுக்கு  அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார். மேலும், சிறுதானியங் களை மதிப்புக்கூட்டி விவ சாயிகள் விற்பனை செய்வ தற்கு தமிழ்நாடு அரசும்,  மாவட்ட நிர்வாகமும் நடவ டிக்கை எடுக்க வேண்டு மென கடந்த கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது. இதை  மாவட்ட நிர்வாகம் கணக் கில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.