புதுக்கோட்டை நகராட்சி புதுக்குளத்தில், ரூ.5 கோடி மதிப்பீட்டிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.