districts

 புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி சாலை விபத்தில் ஒருவர் பலி

பொன்னமராவதி, மே 23-

     புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி அருகே உள்ள ஜெ.ஜெ. நகரில்  வசித்து வரும் இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிபாபு மற்றும் மகேந்ரன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை டைல்ஸ் ஒட்டும்  பணி செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தனர்.  அரசு போக்குவரத்து பணிமனை அருகே  இருசக்கர வாகனத் தின் மீது எதிரே வந்த டாடா ஏசி வாகனம் மோதியது. இந்த  விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மகேந்திரன் (34) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம டைந்து கால் முறிந்த நிலையில் ஹரிபாபு பொன்னமரா வதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  மேல்  சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.