districts

img

புதுக்கோட்டை மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

புதுக்கோட்டை, பிப்.2- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் புதுக் கோட்டை மாவட்ட மாநாடு வியாழக்கிழமை புதுக்கோட்டையை அடுத்த ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.  ஜெ.ஜெ. கல்லூரி முதல்வர் பரசுராமன் முன்னிலை வகித்தார். மண்டல மாநாட்டிற்கு  தேர்வு செய்யப்பட்ட மாணவர்களைப் பாராட்டி மாவட்டக் கல்வி அலுவலர் ரமேஷ்  உரையாற்றினார். மண்டல மாநாட்டிற்கு சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளி-வேதியன்குடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி-மீனம்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி-அண்ணா மலையார் குடியிருப்பு, ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி-மேல்மங்கலம், பிரதாபிராமன் பட்டினம், ஒடப்பவிடுதி, அசோக்நகர், அரசு மேல்நிலைப் பள்ளி சூரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஏம்பல் ஆகிய பள்ளிகள்  தேர்வு செய்யப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷோபா, அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமதிலகம் ஆகியோர் நிகழ்ச்சி களை ஒருங்கிணைத்தனர். முன்னதாக மாவட்டச் செயலாளர் எம்.வீரமுத்து வரவேற்க,  ஒருங்கிணைப்பாளர் அருள் சுந்தரம் நன்றி கூறினார்.