districts

 புதுக்கோட்டை மாவட்ட சட்ட விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை, ஜூன் 23-

     புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சமூக  நலன் (ம) மகளிர் உரிமைத்துறை சார்பில், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம், மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  

    இப்பயிற்சி வகுப்பில் பெண்கள் அனைவரும் தங்களுக்கு எதிராக  பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படும் பட்சத்தில், புகார் தெரிவிக்கும் நடை முறைகள் குறித்தும், தங்களிடம் வரப்பெறும் பாலியல் ரீதியான புகார்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.  

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ‘பி” பட்டியல் வழக்கறிஞர் ஏ.பார்வின் பானு, தலைமை குற்றவியல் நீதிபதி டி.ஜெயகுமாரி ஜெமி  ரத்னா, மாவட்ட சட்ட பணிகள் ஆலோசனைக் குழு செயலாளர், சார்பு நீதி பதி இ.ராஜேந்திரகண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (பொது) து.தங்கவேல், மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப் பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.