மதுரை, ஜூலை. 27-
கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் நான்கு பேர் உயிரிந்தது தொடர்பாக, தற்போது விசாரணை நடைபெறும் புதுக்கோட்டை மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள பிள்ளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யைச் சேர்ந்த மாணவிகள் தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய நான்கு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரி ழந்தனர்.
இது தொடர்பாக மாயனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விட்டு அப்படியே விட்டு விட்ட னர். நியாயமான- முறையான விசாரணை இல்லை. இந்த வழக்கை சிபிசிஐடிய விசாரணைக்கு மாற்றி உத்தர விட வேண்டும் என ராஜ்குமார் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன் வியாழனன்று விசா ரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, மாணவிகள் உயி ரிழந்தது தொடர்பான விசாரணையை புதுக்கோட்டை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.