புதுக்கோட்டை, ஆக.6-
புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவில் கலை, இலக்கிய ஆளு மைகளுக்கான வாழ்நாள் சாதனை யாளர் விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை வழங்கினார்.
புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவின் ஒன்பதாம் நாளான சனிக் கிழமை மாலை நடந்த நிகழ்ச்சிக்கு, ஆதிகாலத்து அலங்கார மாளிகை உரிமையாளர் எம்.எபி.ஜெயபால் தலைமை வகித்தார். கலை, இலக்கி யத்தில் வாழ்நாள் சாதனை புரிந்த புதுகை ஆளுமைகளுக்கான விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி சிறப்பித்தார்.
இவ்விருதை, ஞானாலயா நூலக நிறுவனர் பா.கிருஷ்ண மூர்த்தி, வரலாற்று ஆய்வாளர் ஜெ. ராஜாமுகமது, தொல்லியல் ஆய்வா ளர் கரு.இராசேந்திரன், மூத்த எழுத் தாளர் செம்பை மணவாளன், மூத்த தமிழறிஞர் துரை.மதிவாணன், மூத்த எழுத்தாளர் ப.உமாபதி ஆகியோர் பெற்றனர். விருது நிகழ்வை கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் ஒருங்கி ணைத்தார்.
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மூத்த வழக்கறிஞர் கே.கே.செல்லப் பாண்டியன், சிகரம் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக கவிஞர் ஸ்டாலின் சரவணன் வர வேற்க, ஆ.செல்வராஜ் நன்றி கூறினார்.
முன்னாள் எம்எல்ஏ கவிதைப் பித்தன், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் இ.பானுப்பிரியா மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் திகழ்ந்த புத்தகத் திருவிழா
பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதுக் கோட்டை 6 ஆவது புத்தகத் திருவிழா நடை பெற்றுள்ளதாக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாக மும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6 ஆவது புத்தகத் திருவிழாவை ஜூலை 28 முதல் ஆக.6 வரை புதுக் கோட்டை நகர்மன்றத்தில் நடத்தின. 9 ஆம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற விழா வில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருதுகளை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகை யில், “புத்தகத் திருவிழாக்களில் இது போன்ற சாதனையாளர்களைப் பாராட்டு வதை முக்கியமான நிகழ்வாகக் கருது கிறேன். மற்ற இடங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களைவிட கூடுதல் சிறப்பம்சங்களோடு இந்தத் திருவிழா நடை பெற்றுள்ளது.
குறிப்பாக தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கவிஞர் சுகுணாவை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்து பெருமைப்படுத்தியது, சிறைக் கைதிகளுக்கு புத்தகங்கள் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது, சாதனை யாளர்களைக் கவுரவிப்பது, தபாலில் புத்த கம் அனுப்ப ஏற்பாடு என பல்வேறு சிறப்பம் சங்களைக் கொண்டு இந்த விழா நடை பெற்றது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்ப தற்காக பெருந்தொகையை ஒதுக்கி வரு கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையில் நடை பெறும் இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு ரூ.20 லட்சம் வரை பள்ளிக் கல்வி மற்றும் நூலகத் துறையின் மூலமாக நிதி ஒதுக்கி வழங்கியிருக்கிறோம்.
மதுரையில் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, தொடங் கப்பட்ட 20 நாட்களில் 70 ஆயிரம் பேர் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இவர்களில் எத்தனை பேர் பார்வையாளர் களாக வந்திருப்பார்கள் என்பது முக்கிய மல்ல. பார்வையாளர்களையும் வாசிக்கத் தூண்டும் பணியை அந்த நூலகம் செய்திருக் கும். இதில்தான் நூலகம் அமைத்ததற்கான வெற்றி அடங்கியிருக்கிறது.
அறிவுசார்ந்த சமுதாயத்தை உரு வாக்குவதற்காக இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களும், நூலகங்களும் தேவைப் படுகின்றன. தனக்கு வழங்கப்படும் புத்த கங்கள் அனைத்தையும் நூலகங்களுக்கு வழங்கி வரும் முதல்வர், அமைச்சர்கள் அனைவரையும் அதையே பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்” என்றார்.